தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

இரா.விஜயகௌரி.

புதிருக்குள் புதிர் எழுதி விடுகதையா வாழ்க்கை
புதருக்குள் புதையல் வைத்து
புதினமெல்லாம் மறுத்து. மறைத்தெழுதி
புலனாகா விடுப்பெழுதும் வாழ்வா ஈது

நெறிமுறைகள் வகுப்பவர் யார்
நீதி மொழி. உரைப்பவர். யார்
எவர் மொழியில் நீதி வெல்லும்
ஈதுரைத்து இயல்பாய். சொல்வார் யார்

அவருக்கும் இவருக்கும் பயந்தெழுதி
அவலட்சண மூட்டைகளால் நிரப்பி
அர்த்தமின்றி. நாம் நடக்கும் பாதைக்கு
வாழ்வுப் புத்தகத்தில் ஏது. பெயர்

நிம்மதி தொலைத்த நெடுகணங்கள்
கண்ணீரால் நிரம்பியழும் விழி மடல்கள்
ஒப்பனைகள் மட்டுமிங்கே. உலகுக்கு
உண்மைப்பேரொழியோ. கும்மிருட்டில்

யாருக்கு. எதற்கு எவருக்காய்
போலி. வேடமிட்ட நாடகதாரிகளாய்
இன்னமுமேன் வீட்டினுள். முடக்கம்
சிறுபறவை பறந்து வெகு நாளாயற்றே

Nada Mohan
Author: Nada Mohan