கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

இரா விஜயகௌரி

பேசாமல் பேசும் மொழி

உலகை உணர்வை
உயிர்ப்பின் எழிலை
விதைத்து விளைவாய்
கனியச் செய்வது மொழி

செவியும் நாவும் இழையா பொழுதில்
சேர்ந்து அணைத்து
சீர்படக் கலக்க
உளத்தைத் தொடுமே பேசா மொழி

விழியும் மொழியும் விரலுடன் தொடுத்து
விந்தையின் உணர்வை
மனதுள் தைத்து அழகாய்
அன்பாய்உரசித் தொடுக்கும் சைகை மொழி

உலகே உணரும் உன்னத வழி
பரிவுடன் பாசம்பயிலும் மொழி
எழிலைத் தொடுக்கும் ஏற்றப்படியாய்
எண்ணம்வரையும் சைகை மொழி

கற்றோர். மற்றோர் கதைக்கா மொழி
கனபரிமாண செழிப்பின் வழி
உணர்வின் தொடுதலில் உரைத்து எழுந்து
எல்லோர் இதயமும்தொட்டெழும் பொதுமொழி

Nada Mohan
Author: Nada Mohan