மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா விஜயகௌரி

பேசாமல் பேசும் மொழி

உலகை உணர்வை
உயிர்ப்பின் எழிலை
விதைத்து விளைவாய்
கனியச் செய்வது மொழி

செவியும் நாவும் இழையா பொழுதில்
சேர்ந்து அணைத்து
சீர்படக் கலக்க
உளத்தைத் தொடுமே பேசா மொழி

விழியும் மொழியும் விரலுடன் தொடுத்து
விந்தையின் உணர்வை
மனதுள் தைத்து அழகாய்
அன்பாய்உரசித் தொடுக்கும் சைகை மொழி

உலகே உணரும் உன்னத வழி
பரிவுடன் பாசம்பயிலும் மொழி
எழிலைத் தொடுக்கும் ஏற்றப்படியாய்
எண்ணம்வரையும் சைகை மொழி

கற்றோர். மற்றோர் கதைக்கா மொழி
கனபரிமாண செழிப்பின் வழி
உணர்வின் தொடுதலில் உரைத்து எழுந்து
எல்லோர் இதயமும்தொட்டெழும் பொதுமொழி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading