அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

இரா.விஜயகௌரி

எழுத்தறிவு. இல்லையெனில்……….

எழுத்தறிவு. இல்லையெனில்
மொழியறிவே கருவழியும்
மொழியமுதை சுவைத்தறிய
எழுத்தொலியின். வித்திடுவோம்

அனுபவத்தின். தெளிவதுவும்
ஆக்கத்தின் முதல் தொகுப்பும்
அனுதினமும் உரைத்தெழுதும்
மொழியமுதே உணர்வின் மொழி

எழுத்துக்குள் உயிர்ப்பிருக்கும்
ஏந்திவரும். சொல் இழைவில்
சொற்சுவையில். சொந்தம் வரும்
பேரழகை உயிர்ப்பெழுதும். மொழியே. பெருஞ்சிறப்பு

அகரத்துள் வேராகி. அகிலத்திள்
விரிவாகி. இலக்கியமாய் இசைந்து
உலகத்தின். பரப்பிலெல்லாம். உள் நுழைய
கருவாகி. கருத்தாகி. இழையும் எழுத்தறிவு

Nada Mohan
Author: Nada Mohan