இரா. விஜயகௌரி

விடைதரவா செல்வமே……..

கொதித்துப் பிளந்து
கோபக்கடலில். வெடித்துச் சிதறி
வேகச் சரிவினில். நொருங்கி
சரிந்த சுவர்களின். நடுவே அவள்

பிழந்த பூமியின் இடுக்குகளிடையே
மென்தளிர் மகளாள் கசங்கிக் கிடக்கிறாள்
துருக்கியின் செல்வம் துவண்டது
துடிப்பை. அடக்கி நின்றனள்

அவள் கரங்களின் பிடியை விடாது
விட்டுப் பிரிந்திட முடியா. தந்தை
அனலின் நடுவில் அமர்ந்த சோகம்
அணைத்திட முடியா பாசத் தவிப்பு

இன்னமும் நான் மட்டுமேன்
உயிர்க்கூடு சுமக்கிறேன்
கேள்விகள் துளைக்க 2023
மாசித்திங்கள் 6இன் பதிவெழுதும்
சுவடாய் இவர்கள்

கனக்கிறது இதயம்
கசிகிறது. விழிகள்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading