சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இரா.விஜயகௌரி

வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென உணர்த்தி
வல்லமை பெற்றெழு என்றே நல்கின

நிலையா உலகில் நிலைபெறு வாழ்வை
எழுதிடும் பொழுதில் வரமெனச் சிறக்கும்
உறங்கு நிலையில் உலவிடும் மனிதன்
வாழ்தலின் வழிவகை தொலைத்திடும் ஜந்து

அடுத்ததோர்நொடிக்கு கட்டியம் கூறிட
உனக்கும் எனக்கும் சாத்தியமில்லை
கனிவோடெழுந்து உனக்கென்ன நொடிகளை
விருப்பின் பிடிகளில் விதைத்தே எழுந்திடு

கனவுகள் மெய்ப்பட உழைப்பதில் வெற்றி
கனவே வாழ்வாய் உறைவது மடைமை
வாழ்ந்திடும் பொழுதுகள் செழித்தெழ உழைத்து
வைகறை விடியலை உரமாய் எழுது

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading