நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இரா.விஜயகௌரி

வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென உணர்த்தி
வல்லமை பெற்றெழு என்றே நல்கின

நிலையா உலகில் நிலைபெறு வாழ்வை
எழுதிடும் பொழுதில் வரமெனச் சிறக்கும்
உறங்கு நிலையில் உலவிடும் மனிதன்
வாழ்தலின் வழிவகை தொலைத்திடும் ஜந்து

அடுத்ததோர்நொடிக்கு கட்டியம் கூறிட
உனக்கும் எனக்கும் சாத்தியமில்லை
கனிவோடெழுந்து உனக்கென்ன நொடிகளை
விருப்பின் பிடிகளில் விதைத்தே எழுந்திடு

கனவுகள் மெய்ப்பட உழைப்பதில் வெற்றி
கனவே வாழ்வாய் உறைவது மடைமை
வாழ்ந்திடும் பொழுதுகள் செழித்தெழ உழைத்து
வைகறை விடியலை உரமாய் எழுது

Author: