இரா.விஜயகௌரி

வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென உணர்த்தி
வல்லமை பெற்றெழு என்றே நல்கின

நிலையா உலகில் நிலைபெறு வாழ்வை
எழுதிடும் பொழுதில் வரமெனச் சிறக்கும்
உறங்கு நிலையில் உலவிடும் மனிதன்
வாழ்தலின் வழிவகை தொலைத்திடும் ஜந்து

அடுத்ததோர்நொடிக்கு கட்டியம் கூறிட
உனக்கும் எனக்கும் சாத்தியமில்லை
கனிவோடெழுந்து உனக்கென்ன நொடிகளை
விருப்பின் பிடிகளில் விதைத்தே எழுந்திடு

கனவுகள் மெய்ப்பட உழைப்பதில் வெற்றி
கனவே வாழ்வாய் உறைவது மடைமை
வாழ்ந்திடும் பொழுதுகள் செழித்தெழ உழைத்து
வைகறை விடியலை உரமாய் எழுது

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading