” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

வரத்தினை உரமாக்கு…..
பிறக்கும் நொடிகளும் திறக்கும் வரங்களும்
ஈண்டு மீண்டும் உனக்கென கிடைத்தன
வாழ்தலின் பொருளை வரமென உணர்த்தி
வல்லமை பெற்றெழு என்றே நல்கின

நிலையா உலகில் நிலைபெறு வாழ்வை
எழுதிடும் பொழுதில் வரமெனச் சிறக்கும்
உறங்கு நிலையில் உலவிடும் மனிதன்
வாழ்தலின் வழிவகை தொலைத்திடும் ஜந்து

அடுத்ததோர்நொடிக்கு கட்டியம் கூறிட
உனக்கும் எனக்கும் சாத்தியமில்லை
கனிவோடெழுந்து உனக்கென்ன நொடிகளை
விருப்பின் பிடிகளில் விதைத்தே எழுந்திடு

கனவுகள் மெய்ப்பட உழைப்பதில் வெற்றி
கனவே வாழ்வாய் உறைவது மடைமை
வாழ்ந்திடும் பொழுதுகள் செழித்தெழ உழைத்து
வைகறை விடியலை உரமாய் எழுது

Author: