இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 172
வேண்டும் வலிமை
வாழ்வில் வேண்டும் வலிமை
வஞ்சனை நிறைந்த உலகம்
நெஞ்சில் வேண்டும் வலிமை
வருங்காலம் உந்தன் கையில்

உடல் வலிமை குறைந்தாலும்
உள்ளத்தில் வலிமையிருந்தால்
தடையை தாண்டி வீறு நடை போட
தரணியும் உனது கையில்

தன்னை விட மற்றவரை
வலிமையாக்குவது உன் வலிமை
வலிகள் தாங்கும் வலிமையிருந்தால்
வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading