இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 184
நண்பனின் பிரிவு

எங்கோ பிறந்தோம் நாம் இங்கு
சந்தித்தோமே அகதி முகாமில்
ஒன்றிணைந்தோம் நட்பாக கடைசி
இருமணி நேரம் மகிழ்வாக கதைத்தாயே
பிரிய வேண்டும் என்று பிரிந்தாயோ

உதவி என்று கேட்கமுன்
வந்து நின்று செய்வாயே
என்ன தொடர்போ என நினைப்பேனே
இன்றுவரை தொடர்ந்தோமே
முடிந்து போன கதையாச்சே

இனி காணாத உலகிற்கு
சென்றாயே அன்பு நண்பனே
சிரித்து சிரித்து கதைப்பாயே
நீ எடுத்த முடிவா
காலம் தந்த முடிவா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading