சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 188
ஆகா வியப்பில் விழிகள்

தான் படிக்கா விட்டாலும்
தனதும் தமக்கையின் சேய்களையும்
கொழும்பில் படிக்க வைத்து உயர்த்திய
சிறியதாயார் அன்னலட்சுமி சிவதாசனே

தமக்கை இறந்ததும் கைம்பெண்ணாக
பெற்ற பிள்ளைகளோடு ஐந்து பெறாமகள்களையும்
சேர்த்து வளர்த்த திறமை கண்டு
இன்றும் வியப்பில் எனது விழிகள்

கணவனின் ஓய்வூதிய பணத்தில் தெகிவளையில்
கஞ்சிகுடித்தாவது பிள்ளைகளின் உயர்வில்
மகிழும் சின்னம்மாவுக்கு என்
மனமார்ந்த நன்றியும் சமர்ப்பணம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan