இ.உருத்திரேஸ்வரன்

சுதந்திரமாமே

ஆங்கிலேயர்கள் தந்தார்கள் சுதந்திரம்
என்று நாம் படித்தோமே
சிங்கள அரசாங்கம் தரவில்லையே
என்கிறோம் தமிழர்களான நாமே

சுதந்திரமாமே எங்கே என்று
கேட்கிறார்கள் பெண்கள்
எங்களுக்குமில்லையே அது
என்கிறார்களே ஆண்கள்

நினைத்ததை எல்லாம் செய்கிறார்களே
சுதந்திரம் இல்லாமலா என
தெரிந்தவர்கள் கூறுவீர்களா
யாருக்கு சுதந்திரம் இங்கு என்பதே கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading