10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
உடன்பிறப்புக்கள்
ரஜனி அன்ரன் (B.A) “ உடன்பிறப்புக்கள் “ 10.04.2025
ஒருதாயின் உதரத்தில் உதித்த
உதிரத்தின் உறவுகள் உடன்பிறப்புக்கள்
உறவைக் கொண்டாடி மகிழ
உறவினைப் பலப்படுத்தவென
உருவானதே ஏப்ரல்பத்து
உடன்பிறப்புக்கள் தினமாக !
அக்கா அண்ணா தங்கையென அறுவராகி
ஒருகூட்டுப் பறவைகளாய் சிறகடித்து
ஒன்றாகக்கூடி மகிழ்ந்தகாலம்
கிளைகள் தாங்கிய வேராக
பாசநிழலில் வாழ்ந்தகாலம்
பகிர்ந்து உண்டகாலம்
பசுமையாக இனிக்கிறதே இன்றும் !
அப்பப்போ செல்லச்சண்டைகள் சிணுங்கல்கள்
சண்டையிலும் பாசம் முகிழ்க்கும்
சிரிப்பிலும் சிங்காரமிருக்கும்
புதையலாய் நினைவுகளும் பூக்கும்
பூக்களாய் பாசம்விரியும்
கூடுவிட்டு கூடுகலைந்து நாடுவிட்டு நாடுவந்து
வாழ்ந்தாலும் தொடர்கிறது பாசவலை
உடன்பிறப்புக்கள் எம்முயிரானவர்
உன்னததினத்தை உரமாக்குவோம் !
Author: ரஜனி அன்ரன்
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...