சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது

உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது

உன் செயலின்படியே வாழ்க்கை என்று
துன்பங்களுக்கு இடையிலும் வாய்ப்புக்கள் கண்டு
எண்ணங்களே அமைக்குமிந்த வாழ்க்கையின் நிகழ்வை
இன்னல்களைக் கடந்து அடையலாமே மகிழ்வை

எதுவும் சில காலம்தான் இங்கு
அதுவும் கடந்துபோகலாம் அங்கு
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று
கடந்திடின் வாழ்வை அமைதியும் உண்டு

உன்னை நீயே நன்கு அறிவாய்
இன்றே உணர்ந்து வெளியே வருவாய்
துணிந்தால் எதற்கும் வெற்றியே வரவாய்
மணித்துளி ஒவ்வொன்றும் பொன்னென அறிவாய்

துயரம் ஒருபோதும் ஏற்றிடாது உயரம்
தனிமை ஒருநாளும் தந்திடாது இனிமை
மனிதனின் வாழ்க்கையை அமைக்குமாம் விதி
இனி மாற்றியமைக்கட்டும் உன்னை உன்மதி

கொண்டாலே நம்பிக்கை சூழ்நிலை சாதகம்
உண்டாகி முன்னேற்றம் அனுதினமும் ஏறுமுகம்
இல்லாதவன் என்கின்ற சுமைகளை நீக்கலாம்
நல்லதொரு வாழ்க்கையை அனுபவித்துப் பார்க்கலாம்

சோதனைகள் உனக்கெனவே வந்துவந்து போகும்
வேதனையை தந்துவிட உள்ளமதும் நோகும்
மனம் எடுக்குமங்கு எதிர்மறையான முடிவு
குணத்தை மாற்றியமைக்காவிடின் வந்திடாது விடிவு

இந்த நிலை நிச்சயமாக மாறும்
சிந்தித்தால் அடைந்துவிடும் வாழ்க்கையதும் பேறும்
கண்டுபிடி உன்னைப்பற்றி மேலும் கண்டுபிடி
எண்ணங்களின் ஏற்றங்களே வாழ்க்கையின் ஏற்றப்படி

ஜெயம்
18-04-2024

Nada Mohan
Author: Nada Mohan