உயிரான உயிரே

உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை

நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்

ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய்

என்னகம் புகுந்தவா ஏற்றமாய் வழிவகுத்தவா

முன்னைய தவப்பயன் உனையே அடைந்தது

இன்முகம் கண்டதும் இன்பமே பொங்குமே

அன்பாலே என்னை அரவணைத்த காதலனே

இன்னொரு பிறவியிலும் நீதான் கணவன்

மதிப்பும் மாண்பும் மலர்ந்த முகமும்

மதியின் ஒளியாய் வீசும் அழகும்

விதியே உன்னை வாழ்த்தியே நிற்பேன்

கருணையும் நிறைந்தவரை காலமெல்லாம் வாழவைப்பாய்

சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading