11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
பெற்றிட்ட வாழ்வுதனை
பொற்காலமாக்கிடவே
கடந்த கால கசப்புக்களை
ஓரமாய் ஒதுக்கிடுவோம்
இருள் தந்த வினைகளை
சிந்தித்துப் பயனில்லை
வெளிச்சத்தை நோக்கிடுவோம் -அங்கே
ஒளிர்ந்திடும் பாதையொன்று
புத்துலகம் படைத்திடவே
அனுபவ அறிவும் புரிதலில் தெளிவுமாய்
தடைகளைத் தகர்த்து
துணிவுடன் நடந்து
நானிலம்எங்கும்
நற்பாதை அமைத்து
செப்பனிட்ட பாதையிலே
நடந்திடும் போதினிலே
உண்மை அன்பு மலர
உறுதியாகும் நம்பிக்கை
மனதிலே நிம்மதி
எதிர் காலம் நலமாகும்
வாழ்வெல்லாம் வளமாகும்.
நன்றி வணக்கம்…..
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.