தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

என்மனம்..! கெங்கா ஸ்ரான்லி.

என்மனம்..!
கெங்கா ஸ்ரான்லி.
——
மனம் முழுக்க உங்கள் நினைப்பு
தினம்தினம் பல நிகழ்வு
இனசனம் அருகில் இருந்தும்
மனதில் சஞ்சலமே
எங்கும் எதிலும் உங்கள் உருவம்
சாப்பிடும் போதும் உங்கள் முகம்
எந்நேரமும் உங்கள் நினைவே
முடியவில்லை நினைக்கின்றேன்
ஆறுதலடைய
கொஞ்ச நேரம் நினையாது இருந்தாலும்
மிஞ்சும் நேரம் திரும்ப வந்துவிடும்
யாருடன் கதைத்தாலும் முடிவில்
உங்கள் கதைதான் வரும்
கதைக்கும் போதும் கண்ணீர் வரும்
கட்டுப் படுத்த கஷ்டமாக இருக்கும்
ஏனிந்த வாழ்க்கை
ஏனிந்த நலைமை
அன்றில்களாக இருந்தோம்
மகிழ்ச்சி நிம்மதி எல்லாம்
உங்களுடனே போய்விட்டதே
என் செய்வேன் என் மனம்
படும்பாடு
சொல்ல முடியா வேதனையில்..

கெங்கா ஸ்ரான்லி
ஜேர்மனி.
03.05.23.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading