என்மனம்..! கெங்கா ஸ்ரான்லி.

என்மனம்..!
கெங்கா ஸ்ரான்லி.
——
மனம் முழுக்க உங்கள் நினைப்பு
தினம்தினம் பல நிகழ்வு
இனசனம் அருகில் இருந்தும்
மனதில் சஞ்சலமே
எங்கும் எதிலும் உங்கள் உருவம்
சாப்பிடும் போதும் உங்கள் முகம்
எந்நேரமும் உங்கள் நினைவே
முடியவில்லை நினைக்கின்றேன்
ஆறுதலடைய
கொஞ்ச நேரம் நினையாது இருந்தாலும்
மிஞ்சும் நேரம் திரும்ப வந்துவிடும்
யாருடன் கதைத்தாலும் முடிவில்
உங்கள் கதைதான் வரும்
கதைக்கும் போதும் கண்ணீர் வரும்
கட்டுப் படுத்த கஷ்டமாக இருக்கும்
ஏனிந்த வாழ்க்கை
ஏனிந்த நலைமை
அன்றில்களாக இருந்தோம்
மகிழ்ச்சி நிம்மதி எல்லாம்
உங்களுடனே போய்விட்டதே
என் செய்வேன் என் மனம்
படும்பாடு
சொல்ல முடியா வேதனையில்..

கெங்கா ஸ்ரான்லி
ஜேர்மனி.
03.05.23.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading