சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216

“தவிப்பு” ச.சி.சந்திப்பு 216

“அவரவர்க்கு ஆயிரமாய் தவிப்பு
ஆதி முதல் எங்கும் தொடர் இருப்பு

**பாலககனாய் இராம பிரான்
பகிடி என்று செய்த வினை
காவியமாய் துயர் தொடராய் ஆகி
காடு சிறை போர் சீதை தீயில்”

** “மந்தரையின் கூன் முதுகில்
பந்தெறிந்து விளையாட
வந்தவினை கைகேயி ஆகி
வரம் இரண்டால் முடியாட்சி மாறி”

**ஆட்சிக்கட்டில் ஜெயலலிதா ஏறி
ஆசைகூடி நண்பியாலே மாறி
வீட்சி கண்டு கூட்டாக சிறையில்
விதைத்த வினை யால் இன்றும் கறையில்.
**தன் தங்கை காந்தாரி
புண் கண்ணன் மனையான
வஞ்சினத்தால் தாய்மாமன் சகுனி
வரவைத்தான் போரை ஊதி மகுடி.

**கன்னி குந்தி பெத் தெறிய
கர்னன் வாழ்வு திசை தவறி
தம்பி கையால் அம்பு பட்டு சாவு
தவறுகளால் அவரவர்கள் தவிப்பு”

-ப.வை.ஜெயபாலன்-

Nada Mohan
Author: Nada Mohan