புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

-எல்லாளன்- நிகழ்வு 221 “காணி”

அவர் ஒரு அப்பாவி
ஆனாலும் அறிவாளி
எவருக்கும் உபகாரி
இலண்டனிலே நிலையாகி.

முதிச வழி சொத்து
மூலமாய் சீதனமாய்
அதிகளவு காணி
அமைந்த மனை மாடி

என்றெல்லாம் ஊரில்
இருப்பு அவர் பேரில்
தன்னுடைய மண்ணில்
தன் தமயன் பார்ப்பில்

ஊருக்கு போகும்
ஓய்வில் விடுமுறையில்
காதுக்குள் வந்து
கதை சொல்வார் ஒருவர்

வெளிநாட்டார் காணிக்கு
வில்லங்கம் வரக்கூடும்
புலிக்காரர் பறிப்பார்கள்
போர் தீரும் மட்டும் நீர்

அண்ணன் பராபரிப்பில்
அளித்துவிடும் அதை என்று
அண்ணன் ஏற்பாட்டில்
அளப்பார் கதை இவர்க்கு.

ஆசை எதும் இல்லாத
அண்ணன்தான் அவரும்
பேராசை மனையாளின்
பேச்சுக்கு அவர் அடக்கம்

எழுதிக் கொடுத்தார்
இடையே போர் ஓய
உறுதிக் கட்டோடு
ஊருக்கு புறப்பட்டார்.

பாரிச வாதத்தால்
படுக்கையொடு அண்ணர்
வா இரு என்று ஒரு
வார்த்தை அண்ணி சொல்லவில்லை.

காணி வயல் விற்று
காசாக்கி தான் தனக்கு
மாடி மனை கட்டி
வாழுகிறாள் அண்ணி அவள்.

நம்பி கொடுத்ததற்கு
நன்றி இது தான் என்று
வெம்பும் மனத்தோடு
விடுதியிலே தங்கி நின்றார்

உள்ளது ஒரு பையன்
ஊர் சொத்தில் உலை வைத்து
நல்ல படி வாழுகின்றார்
நயவஞ்சர் பாவம் இவர்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading