“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

எல்லாளன்-

“தகாத உறவுகள்”
விவாக முறிவுகள் கூடும்
வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும்
தகாத உறவுகள் மேலும்
தம்பதியராக வாழ்கின்ற போதும்
அவாக் கொண்டு அலைகிறார் பாரும்
அடுத்தவன் மனைவியை கணவணை நாடும்
உதாரணங்கள் பல ஆகி
உள்ளது குடும்ப உறவை மீறி.
*இருபது ஆண்டுகள் கடந்து
இல்லற உறவில் பிள்ளை இரண்டு
புருஷனோ ஐம்பது அகவை
பூண்டனள் மனைவி இன்னொரு உறவை
இருந்த தன் கணவனோடு
இல்லை திருப்தி என்றந்த மாது
ஒருமண பட்டு புது உறவில்
உள்ள பிள்ளைகள் பாசமும் பிரிவில்
**பிரமுகர் பெரியவர் போர்வை
பினணணியில் இந்த சீர்கேட்டு சேர்வை
கரம்பற்றி கட்டிய தாலி
கல்யாண சடங்கு சத்தியம் மீறி
மரணத்தும் உடன்கட்டை பந்தம்
மரபுகள் பண்பாடு தமிழரின் சொந்தம்
மரத்தந்த பண்பாடு போச்சோ
மண்ணைவிட் அகன்றதால் இக்கதி ஆச்சோ?

Nada Mohan
Author: Nada Mohan