” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

-எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 116 “நீர்குமிழி. என்னுடைய திருமண நாள்
என்ற எண்ணம்
என்னுள் எழும் வேளை எலாம்
என்னுள் மின்னும்
துன்பியலாம் நிகழ் வொன்று
தொலையாதென்றும்
சொர்க்கமொடு நரகமென்றும்
விதி ஈதென்றும்
முன்னயவர் மொழிவு எல்லாம்
உண்மை என்ற
முடிவை இது முன்மொழியும்
நிகழ்வு என்பேன்
தம் இனிய திருமணத்தை
எமது நாளில்
தான் பதிந்த மணவாளன்
பிணமாய் போனான்.
**
மண்டபமும் மணவறையும்
காத்திருக்க
மறையோதும் வேதியர்கள்
கண்ணும் பூக்க
கொண்டு வந்தார் உறவினர் அக்
கொடிய சேதி
கொலையுண்டான் விபத்தில்
மண வாளன் என்று
கண்ணிரண்டில் கனவு மின்ன
காத் திருந்த
கன்னியவள் மனம் அதிர
மயங்கி போனாள்
பண்ணிவிட்ட பாவ வினை
பயன் இதாமோ
பாவி அவள் கனவுகள்
நீர் குமிழி தானோ.

**மணப்பொருத்தம் சாதகத்தில்
நூறு வீதம்
மாப்பிள்ளை சீதனமும்
வட்டி தேட்டம்
அணங்கவளும் மனம் ஒட்டி
எழுத்தின் பின்னர்
அவளோடு ஊர் சுற்றி
கண்டாள் சொர்க்கம்
கணம் ஒன்றில் விபத்தாலே
காலன் கையில்
கை பிடிக்க காத்திருந்தாள்
கதியை எண்ணில்
பணம் கொண்டு வாங்குகிற
பண்டம் அல்ல
பாரிதிலே உயிர்களது
பலன்கள் யாவும்
கணநாதன் கர்ம விதி
பயனுக்கேற்ப
கணக்கெழுதி வைத்தபடி
நடக்கும் என்பேன்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan