நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு286
“சூர வதை”
*தவத்துக்காய் சிவன் தந்த சிரஞ்சீவி வரம்
தலைக்கேறி கனம் சூரன்
தேவர்களை வதம்.
நில மாது நிறைவாக
வளம் தந்த நிதியில்
திமிர் ஏறி வல்லரசர்
போர் உலகில் நிதம்.
தந்த வரம் பாலன் கரம்
எய்த வேலாலே
சரிபாதி சேவல் மயில்
என்றான தாமே
மமதையை வதை செய்த
மாயை மகன் கதை
மானிடர்க்கு உணர்த்துகுது
புராணங்கள் இதை.
எழுபத்தைந் ஆண்டின் பின்
ஈழத்தில் மாற்றம்
இருள் மாற ஒளிஏற்றி
வைக்குமா பார்ப்பம்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading