துறவு பூண்ட உறவுகள்

ராணி சம்பந்தர் ஆண்டாண்டு தோறுமதில் மாண்டு குவிந்த மானிடர் மறைந்ததோர் மாயமதிலே விறைத்ததே மனங்களிலே தோண்டத் தோண்டவேயது நீண்ட அடியோடு...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு286
“சூர வதை”
*தவத்துக்காய் சிவன் தந்த சிரஞ்சீவி வரம்
தலைக்கேறி கனம் சூரன்
தேவர்களை வதம்.
நில மாது நிறைவாக
வளம் தந்த நிதியில்
திமிர் ஏறி வல்லரசர்
போர் உலகில் நிதம்.
தந்த வரம் பாலன் கரம்
எய்த வேலாலே
சரிபாதி சேவல் மயில்
என்றான தாமே
மமதையை வதை செய்த
மாயை மகன் கதை
மானிடர்க்கு உணர்த்துகுது
புராணங்கள் இதை.
எழுபத்தைந் ஆண்டின் பின்
ஈழத்தில் மாற்றம்
இருள் மாற ஒளிஏற்றி
வைக்குமா பார்ப்பம்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading