15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ஒளவை
நீ வந்து தங்கிய நெஞ்சில்…
=======================
உதிரம் நிறைந்த
இதயம் தன்னில்
அதிரும் சத்தம்
அமைதி ஆக்கி
மதியின் வழியே
மறைவாய்ப் புகுத்தி
புதிதாய் உன்னைப்
பதித்து வைத்தேன்
எதிலும் நாட்டம்
என்னில் இல்லை
பதிலாய் நீயும்
பகிர்ந்தாய் அன்பை
ரதியாய் என்னை
ரசித்த உன்னை
பதியாய்க் கண்டு
போற்றித் தொழுதேன்
நதியாய் இன்பம்
நாளும் பெருக
புதினம் என்று
பலபேர் பார்க்க
கதியாய் வாழ்வு
கலையும் காலம்
விதியின் வடிவில்
விரைவில் வரவே
சதியில் என்னைச்
சரித்து வீழ்த்த
புதிராய்ப் போன
பருவ வாழ்வில்
பதிந்த எங்கள்
பாசப் பிணைப்போ
பொதிந்து வாழுது
மனதின் உள்ளே.
ஒளவை.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...