18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஒளவை
நீ வந்து தங்கிய நெஞ்சில்…
=======================
உதிரம் நிறைந்த
இதயம் தன்னில்
அதிரும் சத்தம்
அமைதி ஆக்கி
மதியின் வழியே
மறைவாய்ப் புகுத்தி
புதிதாய் உன்னைப்
பதித்து வைத்தேன்
எதிலும் நாட்டம்
என்னில் இல்லை
பதிலாய் நீயும்
பகிர்ந்தாய் அன்பை
ரதியாய் என்னை
ரசித்த உன்னை
பதியாய்க் கண்டு
போற்றித் தொழுதேன்
நதியாய் இன்பம்
நாளும் பெருக
புதினம் என்று
பலபேர் பார்க்க
கதியாய் வாழ்வு
கலையும் காலம்
விதியின் வடிவில்
விரைவில் வரவே
சதியில் என்னைச்
சரித்து வீழ்த்த
புதிராய்ப் போன
பருவ வாழ்வில்
பதிந்த எங்கள்
பாசப் பிணைப்போ
பொதிந்து வாழுது
மனதின் உள்ளே.
ஒளவை.
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...