அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ஒளவை

மூன்றாவது கண்
*********************
மண்ணில் எங்கும்
மானிட அவலம்
எண்ணிப் பார்த்தால்
எங்கும் வன்மம்
பண்பிலா செயலைப்
பார்த்து நோகக்
கண்கள் இரண்டு
காணாது இறைவா

மனிதர் கூட்டம்
மிருகம் போல
புனிதம் அற்றுப்
பழிகள் தொடருதே
புரியும் போரில்
பகையை வெல்ல
எரிக்கும் கண்ணாய்
ஒன்று வேண்டும்

பொய்மை நோக்கம்
புரிந்ததும் அழித்திட
மெய்யாய் ஒருகண்
முகத்தில் இருந்தால்
ஆயுதம் எதுவும்
அணுவில் வேண்டாம்
பாயும் பார்வையே
பகையை எரிக்கும்

முதலாம் கடவுள்
மூன்று கண்ணை
அதனால் தானே
அமைத்துக் கொண்டார்
இதனைச் சாட்டாய்
எடுத்துக் காட்டி
மிதமாய் ஒன்று
எமக்கும் கேட்போம்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading