ஒளவை

சுயம்
******
இறைவன் படைப்பில்
இயங்கும் உயிரில்
மறைவாய் ஒன்று
மிதமாய் இருக்கும்
குறைகள் பலதைக்
கொண்டால் கூட
நிறைவாய் ஏதோ
நிமிர்ந்து நிற்கும்

நிலவும் வானும்
நீரும் மண்ணும்
பலத்தில் தம்மைப்
பிறதாய் எண்ணா
தமக்குள் இருக்கும்
சுயத்தைக் கொண்டு
எமக்கு இன்பம்
என்றும் தருமே

மனிதன் மட்டும்
மனத்தின் குணத்தால்
தனித்த பண்பின்
தரத்தை மறந்து
நினைத்த உடனே
நிறத்தை மாற்றி
அனைத்தாய் மாற
ஆசை கொள்வான்

உனக்குள் இருக்கும்
உண்மை அறிந்து
மனத்தை மாற்றும்
முயற்சி மறந்து
இனத்தின் சுயத்தை
இருப்பாய்க் கொண்டால்
கனதி அற்றுக்
காலம் கடப்பாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading