“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஒளவை

எதிர்ப்பு அலை
******************
முந்திட்டம் எதுவும் மூளையில் இல்லை
பன்முக அறிவைப் படித்ததும் இல்லை
தன்னாட்டு வளத்தின் தகுதியும் அறியார்
பின்னெப்படி நாட்டை ஆண்டிட முடியும்

மக்களைக் காக்கும் மகத்துவம் மறந்ததால்
சிக்கினீர் இன்று சீன தேசத்திடம்
தப்பென்று நன்றாய்த் தெரிந்தும் கூட
கப்பல் கணக்கில் கடனை வாங்கினீர்

வேளைக்கு வேளை வேற்று நாடுகளில்
ஆளுக்கு மேலே சொத்துகள் சேர்த்து
நீளும் உங்கள் அரசியல் அரங்கில்
பாழாக்கி அழித்தீர் பண்பான நாட்டை

பூமாலை போட்டுப் புகழ்ந்த தலைகள்
ஏமாளியாய் மக்களை
எள்ளி நகைக்கையில்
ஏமாற்றம் கண்டு அதிரும் உள்ளங்கள்
தாமாகத் தொடர்வர் எதிர்ப்பு அலைகளாய்….

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan