06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஒளவை
குரு பார்வை….
*******************
குருவுக்கு அடுத்தே
……கடவுளை வணங்கும்
பெருமை கொண்ட
…… பண்பினை ஊட்டி
கருவான நாள்முதல்
……கல்வியின் சிறப்பை
உருவாக்கி வளர்த்தது
……அறிவார்ந்த எம்மினம்
அறிவில் சிறந்து
…..அவனியில் உலவ
நெறிமுறை வகுத்து
…..நேர்மையான வழிகளைக்
குருகுலக் கல்வியில்
….. குறையின்றித் தந்து
பெருமையாய் வித்தைகள்
…..பெற்றிட வைத்தனர்
குருவின் ஆசி
….. கிடைக்காது போயின்
உருவான வித்தையும்
….. உதவாமல் போகும்
அருள்தரும் குருவின்
….. அன்பான பார்வையில்
வருங்காலம் எல்லாம்
….. வசந்தமே சேரும்
தரமான குருவால்
…..தரப்படும் கல்வி
உரமாக என்றும்
….. உன்னை உயர்த்தும்
சிரம்மீது இதனைத்
….. தெளிவாகக் கொண்டால்
வரலாற்றில் நிலைத்து
…..வளமாக வாழ்வாய்.
ஒளவை.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...