கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஒளவை

மொழி
=======
அழகிய மொழியே
அமுதினும் இனிதே
பழகிடப் பண்பே
பருகினால் கடலே
வழங்கினாய் கொடைகள்
வருங்காலம் புகழே
உழல்கின்றோம் உன்னில்
உயிராக என்றும்

தொன்மையில் முதலாய்த்
தோன்றினாய் உலகில்
தன்மையில் நீயோர்
தனித்துவம் ஆனாய்
அன்பினால் மனதை
ஆழ்கின்றாய் தாயாய்
உன்னுடன் வாழ
உயர்வினைத் தருவாய்

இலக்கண நூல்கள்
இயம்பினாய் வலுவாய்
இலக்கியம் பலதால்
இவ்வுலகை வென்றாய்
பலகோடி நூல்கள்
பாரிற்குத் தந்தாய்
பலபேரும் வியந்து
பார்க்கின்றார் உன்னை

வங்கத்தில் தோன்றி
வழிபல கொண்டாய்
சங்கங்கள் வளர்த்துச்
சரித்திரம் கண்டாய்
அங்கங்கள் பலதில்
அழகினில் மிளிர்ந்தாய்
எங்கினும் உண்டோ
எம்மொழி போல.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading