” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒளவை

மொழி
=======
அழகிய மொழியே
அமுதினும் இனிதே
பழகிடப் பண்பே
பருகினால் கடலே
வழங்கினாய் கொடைகள்
வருங்காலம் புகழே
உழல்கின்றோம் உன்னில்
உயிராக என்றும்

தொன்மையில் முதலாய்த்
தோன்றினாய் உலகில்
தன்மையில் நீயோர்
தனித்துவம் ஆனாய்
அன்பினால் மனதை
ஆழ்கின்றாய் தாயாய்
உன்னுடன் வாழ
உயர்வினைத் தருவாய்

இலக்கண நூல்கள்
இயம்பினாய் வலுவாய்
இலக்கியம் பலதால்
இவ்வுலகை வென்றாய்
பலகோடி நூல்கள்
பாரிற்குத் தந்தாய்
பலபேரும் வியந்து
பார்க்கின்றார் உன்னை

வங்கத்தில் தோன்றி
வழிபல கொண்டாய்
சங்கங்கள் வளர்த்துச்
சரித்திரம் கண்டாய்
அங்கங்கள் பலதில்
அழகினில் மிளிர்ந்தாய்
எங்கினும் உண்டோ
எம்மொழி போல.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan