“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஒளியிலே தெரிவது 688

Selvi Nithianandan 14.11.2024

ஒளியிலே தெரிவது

மனதினில் வலியும் மறந்திடா வாழ்வும்
மகிழ்சியும் இல்லை மாறிய நிலையும்
மானிடம் பேச்சும் மழுங்கிய கல்லாம்
மனதை தொலைத்து மாறும் வழியும்

மாதமும் நகர அகமும் ரணமாய்
மாண்டவர் மீண்டும் வராத கனமாய்
விடியாத மண்ணில் ஏற்றும் விளக்காய்
விடி வெள்ளியாய் வானத்திலே பிரகாசமாய்

கார்த்திகை பூக்களும் கல்லறை ஒளியும்
காவிய வீரருக்கு காசினி மழையும்
காலத்தால் அழியாத கண்ணீர் கடப்பும்
கடந்திடும் பாதை கடினமே என்றும்

உறவுகள் வாழ பாதையை உருவாக்கி
உணவுடன் கல்வி மேலோங்க சீர்தூக்கி
உறக்கம் தொலைத்த உயிரை இணைவாக்கி
உதிரத்து உறவுதனை நிலைமாற வழிகாட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan