” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒளியிலே தெரிவது 688

Selvi Nithianandan 14.11.2024

ஒளியிலே தெரிவது

மனதினில் வலியும் மறந்திடா வாழ்வும்
மகிழ்சியும் இல்லை மாறிய நிலையும்
மானிடம் பேச்சும் மழுங்கிய கல்லாம்
மனதை தொலைத்து மாறும் வழியும்

மாதமும் நகர அகமும் ரணமாய்
மாண்டவர் மீண்டும் வராத கனமாய்
விடியாத மண்ணில் ஏற்றும் விளக்காய்
விடி வெள்ளியாய் வானத்திலே பிரகாசமாய்

கார்த்திகை பூக்களும் கல்லறை ஒளியும்
காவிய வீரருக்கு காசினி மழையும்
காலத்தால் அழியாத கண்ணீர் கடப்பும்
கடந்திடும் பாதை கடினமே என்றும்

உறவுகள் வாழ பாதையை உருவாக்கி
உணவுடன் கல்வி மேலோங்க சீர்தூக்கி
உறக்கம் தொலைத்த உயிரை இணைவாக்கி
உதிரத்து உறவுதனை நிலைமாற வழிகாட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan