கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஒளியிலே தெரிவது 688

Selvi Nithianandan 14.11.2024

ஒளியிலே தெரிவது

மனதினில் வலியும் மறந்திடா வாழ்வும்
மகிழ்சியும் இல்லை மாறிய நிலையும்
மானிடம் பேச்சும் மழுங்கிய கல்லாம்
மனதை தொலைத்து மாறும் வழியும்

மாதமும் நகர அகமும் ரணமாய்
மாண்டவர் மீண்டும் வராத கனமாய்
விடியாத மண்ணில் ஏற்றும் விளக்காய்
விடி வெள்ளியாய் வானத்திலே பிரகாசமாய்

கார்த்திகை பூக்களும் கல்லறை ஒளியும்
காவிய வீரருக்கு காசினி மழையும்
காலத்தால் அழியாத கண்ணீர் கடப்பும்
கடந்திடும் பாதை கடினமே என்றும்

உறவுகள் வாழ பாதையை உருவாக்கி
உணவுடன் கல்வி மேலோங்க சீர்தூக்கி
உறக்கம் தொலைத்த உயிரை இணைவாக்கி
உதிரத்து உறவுதனை நிலைமாற வழிகாட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading