கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால் அழிவினிலே
புதை குழிகளில் புதைந்த காலம்
ஆழிப்பேரவை அளிப்பினிலே
அள்ளிச்சென்ற கடலலை காலம்
கொரோனா கொடிய நோய் கொள்ளை
கொன்றளித்த கொடுமைக் காலம்
போதை வஸ்தில் அடிமையாகி
முகவரியை தொலைத்த காலம்
சூறாவளி வெள்ளப் பெருக்கு சுனாமி
மண் சரிவு புதைவில் இறந்தும் காணாமற் காலம்
இவை கண்களில் செந்நீரை நிறைக்குதே

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading