16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
« கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் »
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர அங்காடிகளில்
ஆரவாரக் குரலழுப்பிய
மக்கள் கூட்டத்தின் நடுவே
அமைதியின் மன்னனை காணவில்லை
வீட்டுக்குள்ளே ஆட்டம் பாட்டம்
விருந்தும் மருந்துமாய்
விழாக்கால கொண்டாட்டம்
வண்ண வண்ண விளக்கொளியிலும்
வடிவழகனைக் காணவில்லை
இங்கும் ஒரு கூட்டம்
இன்னிசை இசைக்க
துள்ளிக் குதிப்போர் நடுவிலும்ம்தூ
தூய பாலனைக் காணவில்லை
ஊரெங்கும் தேடியும்
உத்தமனைக் காணவில்லை
ஊர்தாண்டி வந்த வேளை
ஓர்ஒலை குடிசைகண்டு நின்றேன்
ஒட்டி உலர்ந்த உருவம்
ஒளியிழந்த கண்கள்
பசியால் மெலிந்த
பாவப் பட்ட பையன்
எழுத்தறியா சிறுவனின்
விழி சொன்ன மொழியில்
விழித்துக் கொண்டேன்
தேவ பாலனைக் கண்ட மகிழ்வில்
தொடர்ந்தேன் பயணம்
சிறுவனை அணைத்தபடி.,,,,,,,
நன்றி……
0
்
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...