“கனவான காதல்”

சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம் 221

“கனவான காதல்”

கனவு காதல்
நினைவாக வந்தது
நினைத்து நினைத்து
நித்தம் மனம் துடித்தது!

புகைப்படத்தில் பாத்த மணமகன்
புகுந்த வீடாக மாறிய காதல்
தொலைபேசி உரையாடல்
தொலை தூர மகிழ்வாச்சு!

நேரில் பார்க்கும் நாளை ஏங்கி தவித்து
நேரில் கண்டதும் வெட்கி தலைகுனிந்ததும்!

திருமணமாம் திருமணம்
இரு மனங்கள் ஒருமனதாகி!

அன்பில் எழுதிய காவியம்
இல்லறமாம் நல்றம்!

இன்பமாக இப்பயணத்தில் சான்று
மூன்று முத்துக்கள் பெற்று!

உள்ளத்தை உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பு எனும் மாளிகைக்குள் அகப்பட்டு!

முதுமையிலும் இளமையான காதல்
முடிநரைத்த போதும்
இனிமையான வாழ்க்கை
கைகோத்து நடப்போம்
என்றென்றும் காதலுடன்!

நன்றி
வணக்கம்
07.02.26

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading