பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ….கனவுப்பயணம்….. 07.05.2026

கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின் நதியில்நீந்தி
ஏற்றமுற காகிதத் தோணியில் மிதந்து
சொற்களின் வேட்டையைத் தேடியபடி
மைகடந்து பயணிக்கிறது என்கனவுப்பயணம் !

அகராதிக்குள் சிக்காத சொற்களைத்தேடி
அர்த்தங்கள் புதைந்த மெளனத்தைநாடி
அலைகிறது எனது எழுதுகோல்
மேகத்திடம் கொஞ்சம் வண்ணத்தையும்
வெண்நிலாவிடம் சொற்ப வெண்மையையும்
மண்டியிட்டு கேட்டு தொடர்கிறது என்கனவுப்பயணம் !

காலம் ஒருகண்ணாடியாகிட
கண்ணாடியின் அழுக்கைத் துடைக்கும் தூரிகையாக
என்கவிகள் அமைந்திடுமே
அடக்குமுறைகள் வெடித்திடும்போது
அமைதி காக்காது மெளனத்தை உடைத்து
சமூகத்தின் குரலாக முழங்குவதே
சுமூகமான என்இலட்சியக் கனவுப்பயணம் !