அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கமலா ஐஎயபாலன்

கழிநெடிலடி 25
காய் காய் காய் மா
காய் காய காய் மா

தாய்நாடு

நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே
நிலையாக நீகொண்ட மண்வளமும் இனிதே
நீள்குளமும் வாய்க்காலும் நெற்கதிரும் சேர்ந்து
நின்மதியைத் தருமெங்கள் நாடெங்கள் நாடே

நலங்கண்டு வாழ்ந்திடுவோம் வற்றாத சொந்தம்
நல்லனவும் கெட்டனவும் நாலும்நாம் கலந்தே
நன்றியுடன் உறவாடி நற்பணிகள் செய்தும்
நலன்மிக்க பொன்கொளிக்கும் நாடெங்கள் நாடே

புலம்பெயர்ந்து வந்ததினால் முகமிழந்து வாழும்
புரியாத மொழியுடனும் போராடி முயன்றும்
பொறுமையுடன் இருக்கின்றோம் பிள்ளைகனின் வாழ்வால்
பொக்கிசமாம் தாய்மண்ணும் பொன்போன்ற நாடே

தலம்பலவும் கொண்டநிலம் தழிழ்மன்ன ராண்ட
திருத்தலங்கள் பாட்டினிலே சிறப்புமிகு நாடு
தருமின்பம் யாவருக்கும் தாய்நாடு தானே
தரணியிலே சிறந்ததுவே நாடெங்கள் நாடே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading