கமலா ஜெயபாலன்

காணி
அன்னை ஞாபகம் அந்தக் காணி
அதனை மறக்க யாரால் முடியும்
தன்னை கொடுத்து தாங்கிக் காத்து
தனமும் தந்த தங்கப் பூமி

புல்லும் வளர்ந்து பொது இடமாகி
போவோர் வருவோர் போக்கிட மாகி
அல்லும் பகலும் ஆக்கியது எல்லாம்
அபகரித்தும் அதைக் காக்க

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு
பற்றை வளர்ந்து பாம்புப் புற்றாய்
வார் ஓடி வரம்பும் போய்
வளர்ந்த தென்னை வருமானம் வளமாய்

உடையவன் இன்றேல் ஒருமுழம் கட்டை
உண்மைப் பழமொழி இதவும் அன்றோ
அடுத்தவர் கையில் கொடுப்பது யாவும்
அபகரிப் ஆக துயரமே தேறும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading