தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

இலக்கு
இலக்கு இல்லா வாழ்வு
கடிவாளம் இல்லாக் குதிரை போல/
தான் போனபோக்கில்
தலைதெறித்து ஓடும்/
எண்ணியது எண்ணமாய்
இருத்தி மனதில்/
கண்ணியமாக்க் காரியம்
கச்சிதமாய் நகர்த்த/
நோக்கம் நிறைவடையும்
நொந்தமனம் சாந்தமகும்/

பள்ளிப் படிப்பதனில்
பாதை மாறாமல்/
கள்ளத் தனமின்றி
கற்றிட்டால் கல்விதனை/
எல்லை நாம்கண்டு
எட்டிடலாம் இலக்கை/
கருவில் சுமந்து
கற்பனையில் மிதந்து/
தருவாய் கிளைகள்
பரம்பி வாழ்வில்/
சாதனைகள் புரிய
நாம் பெற்றவர்கள்/
ஆல்போல தளைத்து
அறுகுபோல வேறூன்றி/
வாழ்வில் சிறந்து
பதினாறு செல்வங்களும்/
பெற்று நீடூழிவாழ
வேண்டும் என்பதே/
எம் இலக்கு
இதுவே நோக்கு:/

Nada Mohan
Author: Nada Mohan