கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்.
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்,
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க,
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை,
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் ஆக்கியே,
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்.
தீரமான சிந்தனையால்
தீட்டிய கருத்தும்,
காரமாகி உரைத்துடும்.
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி,
இதையத்தை கல்லாக்கி,
வண்ணத்தை வரிகளாக்கி,
வார்த்தைகளை தீயாக்கி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்.
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading