தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

களையெடுக்கும் கன்னிப்பெண்ணே
—————————-
களை யெடுக்கும் கன்னிப் பெண்ணே/
கண்ணே உன்னக் கண்ட தனால்/
வயல்காட்டு வரம்பினிலே
வந்துநானும் சுத்துறேன்டி/
பயலைப் பிடிச்சிருக்கா
பயப்படாமல் சொல்லேண்டி/

கண்ணழகு மூக்கழகு கண்மணியே உன்னழகு/
கண்மூட முடியாமல்
கலக்கி அடிக்குதடி/
பொன்னான உன்பாதம்
மண்ணான சேற்றிலே/
மடங்கிப் போகாமல்
மாமன் தாங்குவேண்டி/

கன்னக் குழியழகும் கருங்கூந்தல் பேரழகும்/
அன்ன நடையழகும் அசத்துதடி என்மனசை/
பண்ணாலே பாட்டிசைத்து பம்பரமாய் நாற்றுநட/
காதல் பெருகுதடி காளைமனம் ஏங்குதடி/

வண்ணக் கிளியழகே
வடிவான பெண்ணழகே/
வளையலும் சினுங்குதே
வருவாயோ எனதருகே/
தருவாயா உன்மனசை
தாங்குவேண்டி காலமெல்லாம்/
முருகன் முறைப்படியே
அருகில்வந்து அமரேண்டி/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading