பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

கமலா ஜெயபாலன்

எண்ணம்
இனிக்கும் நினைவுகள் எண்ணத்தில் ஓடும்
கனிந்து மனதில் கரைந்து பாயும்

தந்தையும் தாயும் தந்த பாசமும்
எந்தை நாடும் எழிலான காட்சிகளும்

அண்ணன் அக்கா அனைத்த உறவும்
கண்ணில் நீராகி கவலைக்குள் தள்ளும்

மண்ணில் வீடுகட்டி மகிந்த காலங்கள்
எண்ணத்தில் இருத்தி இழந்தவை போக

இருப்பவை எண்ணி இதயம் நிறைந்து
வருபவை எல்லாம் வளமாய் குவிய

நல்ல மனிதராய் நானிலம் போற்ற
இல்லை என்று எதுவும் வேண்டாம்

இதுவே போதும் இறைவன் தந்தது
அதுவே விதியென ஆறுதல் அடைவோம்

Nada Mohan
Author: Nada Mohan