சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பணம்
பணம்
வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான்
வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான்
மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும்
ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி
கணமும் உறங்காமல் கட்டிக் காத்து
பிணமாய் போக பின்னால் வருமா

நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே
வல்லது என்பேன் வாய்மையும் அதுவே
சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல்
உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan