கமலா ஜெயபாலன்

பணம்
பணம்
வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான்
வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான்
மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும்
ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி
கணமும் உறங்காமல் கட்டிக் காத்து
பிணமாய் போக பின்னால் வருமா

நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே
வல்லது என்பேன் வாய்மையும் அதுவே
சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல்
உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading