13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
கலாதேவி பத்மநாதன்.
“சந்தக் கவித்தளம் வாழியவே”
பாமுகப் பந்தலிட்டு
படர்ந்திருக்கும் பூக்களே
நான்முகன் இறையருளின்
நற்றமிழ் கவிஞர்களே
கவிப்பூக்கள் இருபதும்
கைத்துணையாய் இருபத்தும்
புவிமீதில் பூத்திங்கே
புகழ்மணம் வீசுதே
எழில்மிகு கவிப்பூவில்
என்னையும் ஒருபூவாய்
பொழிவின் தென்றலாய்
புதுவரவாய் இணைத்தே
தத்தி தத்தி கவிபடைக்க
தைரியம் தந்தே
நித்திய வரிகளின்
நிதான விந்தை
அதிபர் அண்ணாவும்
அவரது இணையாளும்
நதியாய் தோழமையாய்
நட்புடன் பேணியே
ஜெயம்தரும் பாலகராம்
ஜெயபால சகோதர
இயற்றிடும் பாவரிகள்
இளமை துள்ளுமே
அகவைஅறுபதிலும்
ஆற்றல் இருபதாய்
முகத்தில் கவிரசம்
முன்வந்து பாயுமே
வாழிய பல்லாண்டு
வாழ்க்கை ஆரோக்கியமாய்
ஆழிப்பேரலை
ஆற்றல் பெருக்குடனே !
————————————-
நன்றி வணக்கம்🙏
கலாதேவி பத்மநாதன்
ஈழக்குடியிருப்பு தமிழ்நாடு
இந்தியா.

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...