சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கலாதேவி பத்மநாதன்.

“சந்தக் கவித்தளம் வாழியவே”

பாமுகப் பந்தலிட்டு
படர்ந்திருக்கும் பூக்களே
நான்முகன் இறையருளின்
நற்றமிழ் கவிஞர்களே

கவிப்பூக்கள் இருபதும்
கைத்துணையாய் இருபத்தும்
புவிமீதில் பூத்திங்கே
புகழ்மணம் வீசுதே

எழில்மிகு கவிப்பூவில்
என்னையும் ஒருபூவாய்
பொழிவின் தென்றலாய்
புதுவரவாய் இணைத்தே

தத்தி தத்தி கவிபடைக்க
தைரியம் தந்தே
நித்திய வரிகளின்
நிதான விந்தை

அதிபர் அண்ணாவும்
அவரது இணையாளும்
நதியாய் தோழமையாய்
நட்புடன் பேணியே

ஜெயம்தரும் பாலகராம்
ஜெயபால சகோதர
இயற்றிடும் பாவரிகள்
இளமை துள்ளுமே

அகவைஅறுபதிலும்
ஆற்றல் இருபதாய்
முகத்தில் கவிரசம்
முன்வந்து பாயுமே

வாழிய பல்லாண்டு
வாழ்க்கை ஆரோக்கியமாய்
ஆழிப்பேரலை
ஆற்றல் பெருக்குடனே !
————————————-
நன்றி வணக்கம்🙏
கலாதேவி பத்மநாதன்
ஈழக்குடியிருப்பு தமிழ்நாடு
இந்தியா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading