களம் எதுவோ…

உலகளாவிய தொழிளார்களே உலகின் மூச்சு….
ஊறுகளின்றிய தேறு உயிர்காக்கும் கரங்கள்…
எட்டுத்திக்கும் முட்டிமோதும் அயலறியா பற்றாக்குறை….
ஏறத்தாழ நிலுவையற்ற நிறுவை….
உழைப்புக்கான வரவும் செலவும் ஊராறியாத சரிதம்….
ஊதியம் வழங்க உறுத்தலில் பலவழிப்போதனை….
ஒன்றிய தேடலில் ஒன்றுசேர பேச்சு வார்த்தை…
ஓட்டுக்காக வேட்டுப்போட்டு
வீணாகும் காலம்…ஐக்கியம் அற்றதில் அவதிகளோ பலமடங்கு… தன்னார்வ தடயங்கள் பலகண்டும் தனித்தியங்க
வழியேது…… தொன்று தொட்டு
தொழிலாளர் தினம் தந்தது என்னவோ….ஏதோ….காலத்தால் அழியாத களம் எதுவோ காண்போமே ….

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading