சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கவலைகள்

கவிதை 801

மெல்ல மெல்ல மனதின் சுவர்களை
உப்புறமாக சுரண்டும் மௌன சிராய்ப்புகள்
கேட்கப்படாத கேள்விகள் சொல்லப்படாத பதில்கள்
என்ன ஆகுமோ என்ற வாக்கியம்
அடுக்கடுக்காக கவலைகளாக உள்ளத்தில் குடியேறும்

நினைவுகளின் சாலையில் திரும்பத் திரும்ப
முன்னும் பின்னும் நடக்க வைக்கும்
தூக்கம் கண் கதவை தட்டும்
எண்ணங்கள் உள்ளே பூட்டிக்கொண்டு விழித்திருக்கும்

ஒரு மனம் புன்னகைத்து மகிழ்கின்றது
மற்றொன்று கவலைகளுள் சிக்கித் தவிக்கின்றது
மனம் மெதுவாக கற்றுக்கொள்ள பழக்கட்டுமின்று
கவலைகள் வாழ்க்கையின் முகவரி அல்லவென்று

ஜெயம்
18-12-2025

Author: