மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா

காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம் உன்னிடம் பணிந்தேன்
வித்தைகள் கோடியே விளம்பிடும் வண்ணமே
முத்துக்கள் பரப்பியே மூவுலகும் ஆளுமே
சித்துக்கள் இல்லையே சிந்தையே வசமாக்கி
பற்றுடன் மிளிரும் நிலையே
நற்றமிழ் நவின்றிட நாதமும் ஓங்கிட
கற்றவர் சிறந்திட காற்றாய் வீசிடவும்
உறவாய் ஊற்றாகவே ஊறும்
பொற்புடன் துலங்கும் சான்றே ஏற்றிடு ஏகமனதாய்க் கொண்டு பேராதரவு காட்டியே
வீற்றுமே வருவாள் வீணையுடன் வாணியும்
சாற்றிடு மலர்கள் அவளுக்கே
-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading