“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கவிதை

இரா.விஜயகௌரி
மொழிக்குள் விதை விதைத்து
கருவுக்குள் உருவாகி கனிவாகி
கதையல்ல காவியமே இதுவென்று
தைத்த நொடி கவிதை பிறந்த கணம்

சிந்தைக்குள் விழுந்த கரு
சிதையாமல் மொழி இழைய
கன கச்சிதமாய் நெய்த இழை
முத்தெனவே முகிழ்ந்தசையும் கவிதை

செழுமைக்குள் செதுக்கி எழும்
மொழிமகளாள் அழகின் எழில்
நெஞ்சத்தில் புகுந்தெழுந்து வானவில்லாய்
விரிந்தசையும் பெருந்தெறிப்பே கவிதை

ஆம் ஆய்ந்தறிந்துமொழிவதல்ல
அகத்திலெழும் உணர்வசைய ஆங்கு
சிதறி விழும் செந்தமிழின் துகள்களெல்லாம்
காந்தமென கவர்ந்திழையும் பூஞ்சொரிவே கவிதை

Nada Mohan
Author: Nada Mohan