நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கார்த்திகை இருபத்தியேழு…

வசந்தா ஜெகதீசன்
கார்த்திகை இருபத்தியேழு…
கணதியின் ரணமாய்
கங்கையில் விழியாய்
கோரமே நினைவாய்
கொன்றழிப்புகள் நிதமாய்
வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே

கார்த்திகை இருபத்தியேழு காரிருள் ஒளியில்
மெளனத்தின் மொழியில்
மறவர்கள் குரல்கள்
எரிமலைக் குமுறலாய்
எங்களின் இதயம்
ரணமென வெடிக்குமே
எண்ணற்ற தாய்மார் கதறலின் ஓலியில்
காந்தள் மலரே குருதியில் உறையும்
கல்லறை எங்கும் கதறும் ஓலம்
அன்றைய அவலத்தின் அகோர தேசம்
கண்முன் கங்கையாய் பெருகும் காணிக்கை விழியே
மறவர்கள் வீரத்தின் மங்காப் பெருமை!
நன்றி

Author: