புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும்
காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க
புதைகுழிகளின் மர்மங்களும் புரியாதபுதிராக
நாளுக்குநாள் மனித எச்சங்களும்மீட்பு
செம்மண்ணுக்குள்ளே புதைந்த வலிகளையும்
தேடப்படும் உறவுகளையும் நீதிக்கான வலிகளையும்
ஆத்மாக்களின் மெளனக் குரல்களையும்
சுமந்தபடியே புதைகுழிகள் சாட்சியாகிறதே !

பூமிக்குகீழே புதைந்து கிடப்பது வெற்றுடல்களல்ல
வெளிவராத சத்தியங்களும் விடைதெரியா வினாக்களுமே
பூமிக்குமேலே மெளனத்தின் ஆட்சி
புதைகுழிக்குள்ளே கதறலின் சாட்சி
அடையாளம் தொலைத்த ஆடைகளும்
அறுபட்டுப்போன நம்பிக்கைகளும்
மண்ணோடு மண்ணாக மக்கிப்போனதுவே !

நீதியின் கதவுகள் சாத்தப்பட
அநீதிகள் தலைவிரித்தாட
மண்ணின் மடியில் மனுதர்மம் புதைந்ததே
புதைகுழிகள் வரலாற்றுப் பெருங்காயம் !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading