கீத்தா பரமானந்தன்

பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு!
கருவாக்கி உருவாக்கி
உயர்வாக்கி வைக்க
வரமாகப் பெற்ற
வாஞ்சையாம் உறவு!
மருவாகப் பிறந்தாலும்
மகவாகக் காத்தே
திருவாகப் போற்றிடும்
தெய்வங்கள் பெற்றோர்!

அல்லவை நீக்கி
வல்லவர் ஆக
அல்லும் பகலுமாய்
அனுதினம் கரைப்பது
அவர்தம் உதிரம்!
சொல்லுக்குள் அடங்காச்
சுந்தரம் இவராய்
சொரிந்துமே நிற்பது
நிரந்தர நேசம்!

முகமது சான்றாய்
முகவரி ஆவார்
முழுமதி ஆக்கிட
முழுவாயுள் தருவார்
தகைமகள் கண்டே
தாங்குவார் மகுடம்
தரணியின் இவரின்றித்
தொடருமோ ஆயுள்?

வறுமையை ஒறுத்து
வளங்களைத் தந்தோர்
பெறுமதி புரிந்தே
போற்றிடல் கடனாம்
நறுமுகை என்றே
நாட்டிடல் பேறாம்
இறுதியில் அதுவே
இசைவுறும் நமதாய்!

கீத்தா பரமானந்தன்15-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading