வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம்சிந்தும் சந்திப்பு!
புதுக்கவிதை!

வார்த்தை வர்ணணையின்றி
வடிக்கும் உணர்வுப் படையல்!
வரைமுறை வைத்தே
அடக்கிய பெண்மைக்குள்
வரலாறு படைக்கும்
புதுமைப் பெண்களாய்!
மலர்வனத்திடை கண்டெடுத்த
மூலிகைச் செடியாய் !

எண்ணத்தை வரையப்
பேனா தேடுகையில்
கையில் கிடைத்த
கணினி என்றாகி
வாஞ்சையாய் ஏற்பவர்களுக்கு
நீ புதுயுகப் பூம்புனல்!

உனக்குள் நீச்சலடிப்பவர்
உவப்பில் நித்தமும்
களையென முகஞ்சுளிப்போர்
முடிவிலியாய் முகக்கறுப்பில்
உணர்வை பரிமாறுவதற்கு
அகரதியும் இலக்கணமுமெதற்கு?

உன்னை அணைகையிலே
கண்டுகொண்டேன் புதுச்சுவையை!
உணர்வின் பரிமாற்றம்
எத்தனை சுகமானது!
உன்னால் தமிழைப்
பருகுபவர்கள் நிறைவதால்
நீ போற்றப்பட வேண்டிய
புதுயுகக் குழந்தை!

தொடர் மாடிகளில்
பசுமையை ஆராதிக்கும்
மொட்டைமாடித் தோட்டமென
உன்னை உணர்ந்து
ரசித்துப் பத்திரப்படுத்துகிறேன்
விரைந்தோடும் அடுத்தசந்ததி
உன் சுவையை உணரும்!

கீத்தா பரமானந்தன்26-01-2021

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading